ನೆನೆದವರ ಶೋಕ

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.   (௲௨௱௧ - 1201)
 

(ಮನಸ್ಸಿನಲ್ಲಿ) ನೆನೆದರೆ ಸಾಕು, ತೀರದ ಅತಿಶಯವಾದ ಅನಂದವನ್ನು ಕಾಮವು ಊಟುಮಾಡುವುದರಿಂದ (ಅದು) ಕಳ್ಳಿಗಿಂತ ಸವಿತಾದುದು. (೧೨೦೧)

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.   (௲௨௱௨ - 1202)
 

ತಾವು ಪ್ರೀತಿಸುವವರನ್ನು ನೆನೆಯುವುದರಿಂದ, ವಿರಹದಿದುಂಟಾಗುವ ಸಂಕಟವು ಇಲ್ಲವಾಗುವುದು; ಅದರಿಂದ ಎಲ್ಲಾ ವಿಧದಲ್ಲಿಯೂ ಕಾಮವೆಮಧುರವಾದುದಲ್ಲವೇ? (೧೨೦೨)

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.   (௲௨௱௩ - 1203)
 

ನನಗೆ ನೀನು ಬರುವ ಹಾಗ ತೋರಿ ಹಾಗೆ ಅಡಗಿ ಹೋಗುತ್ತಿದೆ. ಹಾಗೇ ಇನಿಯನೂ ನನ್ನನ್ನು ನೆನೆಯುವಂತೆ ನಟಿಸಿ ನೆನೆಯದೆ ಇರುವರೋ ಏನೋ! (೧೨೦೩)

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.   (௲௨௱௪ - 1204)
 

ಹಾಯ್! ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ನಾನೊಲಿದ ನಲ್ಲನು ನೆಲೆಸಿರುವಂತೆ, ಅವನ ಹೃದಯದಲ್ಲಿ ಕೂಡ ನಾನು ನೆಲಸಿರಬಹುದಲ್ಲವೆ? (೧೨೦೪)

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.   (௲௨௱௫ - 1205)
 

ತಮ್ಮ ಹೃದಯದಲ್ಲಿ ನಾನು ಪ್ರವೇಶಿಸದಂತೆ ಕಾವಲಿಟ್ಟವರು, ನನ್ನ ಹೃದಯದೊಳಗೆ ಸತತವಾಗಿ ಬರಲು ಅವರಿಗೆ ನಾಚಿಕೆ ಎನಿಸುವುದಿಲ್ಲವೆ? (೧೨೦೫)

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.   (௲௨௱௬ - 1206)
 

ಅವರೊಂದಿಗೆ ಸಂಪರ್ಕ ಹೊಂದಿದ (ಮಧುರ) ದಿನಗಳನ್ನು ನೆನೆಯುತ್ತಿರುಉದರಿಂದ ನಾನಿನ್ನೂ ಜೀವಿಸಿದ್ದೇನೆ. (ಇಲ್ಲವಾದರೆ) ನಾನು ಹೇಗೆ ಜೀವಿಸಿರಲಿ? (೧೨೦೬)

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.   (௲௨௱௭ - 1207)
 

ನಾನವನನ್ನು ಮರೆತರೆ ಏನಾಗಬಲ್ಲೆ! (ಅದರಿಂದಲೇ) ನಾನು ಅವನನ್ನು ಮರೆಯಲಾರೆ! ಅವನನ್ನು ನೆನೆಸಿಕೊಂಡರೂ ಮನಸ್ಸು ಸುಡುತ್ತದೆ! (೧೨೦೭)

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.   (௲௨௱௮ - 1208)
 

ನಾನವರನ್ನು ಎಷ್ಟು ನೆನೆಸಿಕೊಂಡರೂ ಕೂಡ, ಅವರು ಕೋಪಿಸಿಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ! ನನ್ನ ಕಾದಲರು ತೋರುವ ಕೃಪೆ ಅಷ್ಟೊಂದು. (೧೨೦೮)

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.   (௲௨௱௯ - 1209)
 

ನಾವಿಬ್ಬರೂ ಬೇರಲ್ಲ ಒಂದು ಅಗಲುವ ಮುಂದೆ ಹೇಳಿದ (ನನ್ನ) ಕಾಲದರ ಕ್ರೂರ ಸ್ವಭಾವವನ್ನು ನೆನೆದು ನನ್ನ ಪ್ರಿಯ ಜೀವವು ವ್ಯರ್ಥವಾಗುತ್ತಿದೆ! (೧೨೦೯)

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.   (௲௨௱௰ - 1210)
 

ತಣ್ಣದಿರನೇ ನೀನು (ನೂರ್ಗಾಲ) ಬಾಳು! ನನ್ನ ಅಂತರಂಗವನ್ನಗಲದೆ, ನನ್ನನ್ನು ಬಿಟ್ಟು ಹೋದವರನ್ನು ನಾನು ಕಾಣುವ ತನಕ ನೀನು ಮರೆಯಾಗಬೇಡ! (೧೨೧೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: புன்னாகவராளி  |  Tala: ஆதி
தலைவன்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது - நண்பா
கள்ளினும் காமம் இனிது

அள்ளி அணைத்தாள் இன்பம் அழகு மயிலாள் இன்பம்
அத்தனையும் நினைப்பில் ஆழப்பதிந்த இன்பம்

தலைவி:
கள்ளினும் காமம் இனிது - தோழி
காணாத நாளும் கொடிது

உள்ளத்தில் உள்ளவர்பால் நானும் உள்ளேனோ
உயிரும் உடலும் ஆனோம் என்ற சொல் வீணோ

கொஞ்சும் கிளியே என்றார் குயிலே மயிலே என்றார்
குலவியே எனை அணைந்தார்
கூடிய நாளை எண்ணின் வாடிய என்னுள்ளமும்
குளிர்ந்து மெய் சிலிர்க்குதடி
அஞ்சல் என்று சொன்னவர்தான் நெஞ்சில் இடம் கொண்டவர்தான்
ஆனாலும் எனைப் பிரிந்தார்
அன்னவரைக் கண்ணெதிரில் காணும் வரை தண்மதியே
அகலா திருக்க நீ வாழியவே

இருவரும்:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

தலைவி:
நினைத்தவர் போன்று நினையார் கொல் தும்மல்
சினப்பது போன்று கெடும்

தலைவன்:
நீரினுள் மூழ்கினும் நீலக் குன்றெறினும்
நேரிழை பிரிவு சுடும்

தலைவி:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தும்
காதலர் செய்யும் சிறப்பு

தலைவன்:
இன்னலை நீக்கும் அந்தக் கன்னலை எண்ணும்தொறும்
என்னுள்ள மெல்லாம் இனிப்பு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22