அறிவினால், உழைப்பினால் பொருள் உதவியினால், பொதுநல சேவையினால் எந்த ஒரு நல்ல செயலின் மூலமாவது ஒருவன் புகழ்பெற்று வாழ வேண்டும்.
அப்படி இல்லையானால், நிலம் தன் வளமான பயிர் விளைச்சலை கொடுக்காமல் குறைத்துவிடும்.
மனிதன் பெறக்கூடிய புகழுக்கும், நிலம் அழிக்கக்கூடிய விளைவுக்கும் தொடர்பு இல்லை.
என்றாலும், இப்படிப்பட்ட புகழ் பெறாதவனின் உடலை சுமந்து கொண்டு இருக்கிறோமே என்று நினைக்கும் பூமியானது, தன் விளைச்சலின் பயனை குறைத்துவிடுகிறது.
புகழ் பெறாதவன் வாழ்க்கை சிறப்புடையது அல்ல. புகழ் பெற முயற்சியும் ஊக்கமும் வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறது.