அரசர்கள், ஒரு செய்தியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்குத் தம்பட்டம் (பறை) அடித்து சொல்லுவது வழக்கம்.
அதுபோல, கயவர்கள், தாங்கள் கேள்விப்பட்ட இரகசியங்களை உண்மைகளை, மற்றவர்களுக்கு உடனே சொல்லிவிடுவார்கள். கயவர்களுக்கு இயல்பான அறிவு இல்லை. மேலும், இரகசியத்தை பாதுகாக்க கூடியவர்கள் அல்லர். அதோடு, நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நடந்து கொள்ளமாட்டார்கள்.
இரகசியங்களை கூறுவதால், உண்டாகக்கூடிய தீமை, பழி, குற்றங்களை கயவர்கள் அறியமாட்டார்கள். கயவர்கள் தம்பட்டம் போன்றவர்கள் என்று நகைச்சுவையாக கூறப்படுகிறது.
(இக்காலத்திலும், நீதிமன்றத்தின் மூலம் ஏலம், ஜப்தி முதலியவற்றை தம்பட்டம் அடிக்க செய்து, தெரிவிக்கப்படுகிறது கயவர்கள் என்றால் கீழ்மக்கள், கெட்ட செயல் புரிவோர்.)