ஒரு குளத்தில் உள்ள நீர் எப்பொழுதும் சுத்தமாகவும், நன்றாகவும் இருக்க வேண்டும்.
புதுநீர் குலத்துக்கு வருவதற்கும், இருக்கின்ற பழைய நீர் வெளியே போவதற்கும் வழி அமைத்திருக்க வேண்டும். மேலும், நான்குபுறமும் தாங்கும் கரை (அடைப்பு) இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குளம் சுத்தமாக இருப்பதோடு தண்ணீரும் தேங்கும்.
அதுபோல, ஒருவனுடைய வாழ்க்கை செல்வம் இருந்தபோதிலும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவன் அவனுடைய நன்மை தீமைகளை- இன்ப துன்பங்களை தம்முடையதாக கருதக்கூடிய உறவின் முறையாரோடு மனப்பூர்வமாக கலந்து அளவளாவி மகிழ வேண்டும்.
அப்படி இல்லாவிடில், கரையில்லாத குளம் போல், வாழ்க்கை வீணாகிவிடும்.