பசியினால் புல்லைத் தின்ன நினைத்த பசு, புலித் தோலைப் போர்த்துக் கொண்டு, ஒரு தோட்டத்தினுள்புகுந்து புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.
தோட்டத்தின் காவல்காரன் பார்த்தான். புலி புல்லைத் தின்னாதே என்று சந்தேகப்பட்டான். ஆனால் அதை விரட்டுவதற்கு அவன் அஞ்சினான்.
பசுவுக்கு புல் கிடைத்தது. ஆனாலும், தன் பொய் வேடம் தெரிந்து அடிபடுவோமோ என்று உள்ளூற அச்சம் உண்டாயிற்று.
அதுபோல, உழைத்து உண்ண விரும்பாத சோம்பேறி, பொய்யாக தவ வேடம் பூண்டு சுகபோகங்களை அனுபவிக்க ஆசைப்பட்டுத் திரிகிறான்.
பொதுமக்கள் அவனை நம்பினாலும், ஒருகால் சந்தேகம் எழுகின்றது. ஏனென்றால், அவன் தீமொழி கூறிவிடுவானோ என்ற பயமும் தோன்றுகிறது.
போலி வேடதாரிக்கும் உள்ளூற அச்சம். எங்கே தன் பொய் வேடத்தை மக்கள் அறிந்து உதைத்து விரட்டி விடுவார்களோ என்று பயத்தோடு திரிகிறான்.