பட்டையில் இரும்பை பழுக்கக் காய்ச்சி வைத்துச் சம்மட்டியால் அடித்து தேவையான கருவியை செய்து கொள்கிறான் கொல்லன். வேலை முடிந்ததும் பட்டையை போட்டு விட்டு கொல்லன் போய்விடுவான்.
அதுபோல, இனிய நண்பன், தன்னுடைய காரியத்தை முடித்துக் கொள்வதற்க்காக வருவான். நம்மை வற்புறுத்தி, முடித்துக் கொண்டு பிறகு நம்மை விட்டுப் போய் விடுவான்.
அம்மாதிரி தீய நண்பனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
"முன்பு பகைவனாக இருந்தவன் திடீரென்று நம்முடன் கலந்து நட்பு கொள்ள வந்தால் தக்க சமயம் பார்த்து நம்மை நசுக்குவதற்கு பட்டடையைப் போன்றவன் இன்று உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்" என்றும் பொருள் கொள்ளலாம்.
(பட்டடை என்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்பை அடிப்பதற்கு தாங்கும் அடிக்கல்)