ஒரு வேடன் காட்டிற்குச் சென்று, பயந்து பாய்ந்து ஓடும் முயல்களை அம்பு எய்து பிடித்து வருகிறான்.
மற்றொரு வேடன் பலம் பொருந்திய யானையின் மீது அம்பு எய்கிறான். ஆனால் யானையோ தப்பி ஓடிவிடுகிறது. எய்யப்பட்ட அம்பு யானையோடு போய்விடுகிறது என்றாலும், முயலை பிடித்தவனை காட்டிலும் அம்பு எய்தவனுடைய வீரமே சிறந்தது.
அதுபோல, போரில் பயந்து ஓடும் பகைவனின் படையைத் துரத்திச் சென்று பிடிக்கிறது பெரும்படை. வீரம் பொருந்திய இன்னொரு படையை எதிர்த்து நின்று தாக்கி அந்தப் படை முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தி விடுகிறது.
பயந்து ஓடும் படையினரை வெற்றி கொள்வதைக் காட்டிலும், வலிமையான படையின் முன்னேற்றத்தை எதிர்த்து நிற்பதே சிறப்பாகும்.