രാഗ: ஸ்ரீ ரஞ்சனி | തല: ரூபகம் பல்லவி:காலம் அறிதல் மிகவும் நல்லது - பயன்
காண வல்லது
அநுபல்லவி:மூலப் பொருளை யறிந்து கொள்ள
முன்னேறியே பகையை வெல்ல
சரணம்:"கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்" தெனவே குறள்
பக்கத் துணையாகும் பருவத்தில் சேர்க்கும்
பாங்குறும் செல்வத்தைக் கட்டியே காக்கும்
கால வெள்ளம் தன்னைக் கண்டும் கலங்காது
கல்லணையாய் நெஞ்சம் தேக்கிடும் போது
ஞாலம் கருதினும் வந்து கை கூடும்
நாளும் தன்னாட்சியை நல்லவர் நாடும்