Raga: அம்சத்வனி | Tala: ஆதி பல்லவி:அறமே முதல் ஆகும் நம் வாழ்வில்
அவனிமீதில் எல்லா உயிர்க்கும் துணைசெய்
அநுபல்லவி:திறமே பெறும் தெளிவே தரும்
சிறப்போடு செல்வம் சேர்க்கும் குறள் சொல்
சரணம்:செயற்பாலதோரும் அறனே ஒருவற்
குயற்பால தோரும் பழி; என்றதன்
இயற்பாலதாய் என்றுமே நிலைக்கும்
இதயம் மாசுறாத எண்ணத்தாற் கிளைக்கும்
அழுக்காறு கோபம் ஆசை வன்சொல் நீக்கி
அறத்தால் வளரும் இன்பமே இன்பம்
ஒழுக்காறிதில் உண்மை அன்பு மேவ
ஒருமையோடு மக்கள் பெருமையாக வாழ