தன்னை மறந்து தூங்குபவன் செத்தவனைப் போல காணப்படுவான்.
செத்தவனுக்கும் தூங்கபவனுக்கும் அதிக வேறுபாடு இல்லை.
அதுபோல, மயக்கம் தரும் கள்ளைக் குடிப்பவனும், நஞ்சு உண்டவனைப் போன்றவனே. ஆண்டவன் உடனே இறந்து விடுகிறான். ஆனால், கள்ளை குடிப்பவன் சிறுகச்சிறுக இறக்கிறான்.
இருவருக்கும் தன்னை மறந்த மறதி நிலை ஒன்றே. தூங்கினவனும், செத்தவனும் மறதி நிலையால் ஒரே மாதிரிதான். கள்ளைக் குடித்தவனுக்கும் நஞ்சு உண்டவனுக்கும் மயக்க நிலை ஒரே மாதிரியானதே.
தூங்கினவன் பிறகு விழித்து எழுவதை போல், கள் குடித்தவனும் பிறகு பிழைத்துவிடுகிறான்.
இருவருக்கும் அவ்வளவுதான் வேறுபாடு.