பசியால் வாடித் துன்பம் அடைகிறவர்களுக்கு முதலில் உணவு அளித்து பசியை தீர்க்க வேண்டும்.
உணவு அளிப்பது மிகப் பெரிய உபகாரம்.
பசி தீர்ந்ததும், "மகாராசன் நல்லா இருக்கணும்," "புண்ணியவான் சோறு போட்டான், அவன் குடும்பம் வாழ வேண்டும்" என்று பலர் வாழ்த்துவார்கள்.
ஏழை மக்களின் பசிக்கு உணவு அளித்து, பசியை தீர்த்தால், செல்வத்தை உடையவனின் செல்வமானது பிற்காலத்தில், தனக்கு உதவுவதற்காக, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருப்பது போன்றது.
"செல்வம் அழிந்து போகக்கூடியது. அழியாமல் இருந்தாலும், இறக்கும்போது தன்னோடு வராது. அதனால், ஏழைகளின் பசியை தீர்ப்பதானது, தன்னுடைய செல்வத்தை ஓரிடத்தில் சேமித்து வைப்பதைப் போன்றது."