கொத்துக் கொத்தாக செடியின் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆனால், அதில் வாசனை- (மணம்) இல்லை. நன்றாக மலர்ந்தும், மணமில்லாத மலர், யாருக்கு என்ன பயனைத் தரமுடியும்?
அதுபோல, ஒருவர், தான் கற்று உணர்ந்த அரிய கருத்துக்களை தெளிவாக, பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும். அவரிடம் அதற்கான திறமை இல்லை என்றால் அவர் கற்றதனால் யாருக்கு என்ன பயன்? பூக்கள் பூத்திருப்பது, கல்வி அறிவுடையவனாக இருப்பது போன்றது.
பூக்கள் வாசனையோடு இருப்பது மற்றவர்களுக்கு பயன்பட்டு இன்பம் தருவது.