දානය

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.   (௨௱௨௰௧ - 221)
 

දුප්පතූනට යමක් - දීම ම දීමනාව ය පෙරළා උදව්වක් - පිණිස වේ සෙසු සැම දීමනා (𑇢𑇳𑇫𑇡)

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.   (௨௱௨௰௨ - 222)
 

හොඳ පල දෙන බවක් - කීවත් යැදුම නොහොබි පරලෝ නැති වුවත් - දීම හොඳ වේ සදා කල්හිම (𑇢𑇳𑇫𑇢)

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.   (௨௱௨௰௩ - 223)
 

තමා දුප්පත් ය යි - දුකකින් වදන් නොකියා කූලවතා සත්තක - පරම පිවිතූරු ගූණය දීම යිත (𑇢𑇳𑇫𑇣)

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.   (௨௱௨௰௪ - 224)
 

ඉල්ලන්ට මුනි නම්- එය අමිහිරක් ගෙන දේ දෙන ඇත්තාගෙ මුව- පීතියෙන් ඉපිලී එන තූරා (𑇢𑇳𑇫𑇤)

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.   (௨௱௨௰௫ - 225)
 

පැවිද්දන්ගේ බල - සාගිනි ඉවසීම වේ අනුන්ගේ කූසගිනි - නිවන ගිහි බල වැඩි උසස් වේ (𑇢𑇳𑇫𑇥)

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.   (௨௱௨௰௬ - 226)
 

දිළිඳුන්ගෙ කූසගිනි - සමනය කරන සුදනා උපයන ලද දනය - නොරැක රක්නට තැනක් ලැබුවා (𑇢𑇳𑇫𑇦)

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.   (௨௱௨௰௭ - 227)
 

බෙදා දී හැමවිට - තදනන්තරව වැළඳු ගූණවතූන් සාගිනි- රෝගයෙන් පෙළුමත් අමාරු ය (𑇢𑇳𑇫𑇧)

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.   (௨௱௨௰௮ - 228)
 

තම දනය සඟවා - නැති බුං කරන නපුරෝ දීමෙන් ලබත හැකි- සතූට සම්පත නොම දනිත් දෝ (𑇢𑇳𑇫𑇨)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.   (௨௱௨௰௯ - 229)
 

සපයා ගත් අහර- වැළඳුන තමා තනිවම ඉල්ලීමට වඩා - පහත් නින්දිත නිවට ගතිය යි (𑇢𑇳𑇫𑇩)

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.   (௨௱௩௰ - 230)
 

තද දුකක් ඇති වන- දෙයකි මරණය සත්නට එහෙත් එය සැපතකි- දෙන්ට සිතූසේ යමක් නැත්නම් (𑇢𑇳𑇬)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அட்டாணா  |  Tala: ஆதி
பல்லவி:
ஈகை தரும் மெய்யின்பம் தமிழின்பம் அன்றோ
இன்பம் பெறவே உயிர்க்கிதனிலும் வேறுண்டோ

அநுபல்லவி:
ஆகையினால் என்றும் ஈகையே வேண்டும்
அற்றார் அழிபசி தீர்க்க முன் தோன்றும்

சரணம்:
ஏழை எளியவர்கள் படும் துயர்க்கிரங்கும்
இல்லையென்னாதளிக்கும் இயல்பு விளங்கும்
வாழும் முறைமை கண்டோர் மனத்துள்ளியங்கும்
வரும் பயன் குறிக்காத வண்மை துலங்கும்

"சாதலின் இன்னாததில்லை இனிதுதூ உம்
ஈதல் இயையாக்கடை" என்பதே குறளறம்
ஆதரவாம் இந்த அறிவுரை ஏற்போம்
அன்புறும் வாழ்க்கையிலே நாம் புகழ் சேர்ப்போம்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22