வெய்யிலில் அகப்பட்ட புழுவானது, காய்ந்து துடிதுடித்து செத்துப்போய்விடும்.
அதுபோல, அன்பு இல்லாதவனை, நல்ல காரியங்களை செய்யாதவனை (தர்மத்துக்கு விரோதமான செயல்களை செய்தவன்) அறமே துன்புறுத்தி கொன்றுவிடும்.
மனிதாபிமானம் கொண்டு, மனிதநேயத்துடன் மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும். பழக வேண்டும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். தன்னுடைய நலமே பெரிதாகக் கருதி வாழ்பவனை, எவருமே திரும்பிக்கூட, பார்க்க மாட்டார்கள்.
அத்தகைய சுயநலக்காரன், தானாகவே துன்பம் அடைந்து அழிந்து போவான்.
(நன்மையான செயல்களை செய்வதே தர்மம் - அறம்)