உலகத்தில் வாழும் மக்கள் எல்லோரையும், மக்கள் என்று சொல்கிறோம். உருவத்தால் மக்களாக காணப்படுபவர், பண்பிலும் செயலிலும் மக்களாகவே இருந்தால், பொது வாழ்க்கைக்கு ஒரு கெடுதியும் உண்டாகாது.
வெள்ளோடு பிறந்த பதர் நெல் போலவே இருந்தாலும் உள்ளில் அரிசி இல்லாததால், பதர் என்று சொல்லுகின்றோம் அல்லவா?
அதுபோல, மக்களாகப் பிறந்தும், மக்கள் பண்பு இல்லாதவர்கள் மக்கள் ஆகமாட்டார்கள். அத்தகையவரை கயவர் என்பார்கள்.
உருவம், உறுப்புகள், நடை, உடை, பேச்சு முதலியவற்றால், கயவர் மக்களைப் போல காணப்படுவார்கள்.
ஆனால், அவரை ஒப்புவமைப்படுத்தி சொல்லக்கூடிய பொருள் வேறு ஒன்றையும் நாம் கண்டது இல்லை.
கயவரது இழிவை நகைச்சுவையாக கூறுகிறது.