ஒருவருடைய செல்வச் செழிப்பை, கிடைத்திருக்கும் பெரிய உத்தியோகத்தை, சேவை செய்ததால் அடைந்த புகழை (இவற்றில் ஏதாவது ஒன்றை)க் கண்டு பொறாமைப் படுபவன் என்ன கதியை அடைவான்?
அந்தப் பொறாமைகாரனிடம் வெறுப்புக்கொண்ட சீதேவியானவள், தன் அக்காளாகிய மூதேவியிடம், அவனைச் சுட்டிக்காட்டி விட்டு அவள் போய்விடுவாள்.
அவனிடம் செல்வம் இருந்தாலும் பிறகு அது அழிந்து போய், அவனுக்கு வறுமை வந்துவிடும்.
(செல்வத்தைச் (தங்கை) சீதேவி என்றும் வறுமையை (அக்காள்) மூதேவி என்றும் மக்கள் சொல்வார்கள்.)