தேவர்கள் ஆற்றலும், அருளும் நிறைந்தவர்கள். எப்படிப்பட்ட காரியத்தையும் சாதிக்க கூடிய வல்லமை உடையவர்கள், சுதந்திரமானவர்கள், எவரையும் லட்சியம் செய்யமாட்டார்கள். நினைத்ததை அவர்களால் செய்ய முடியும். மக்களின் நன்மையை கருதி, நல்லதை செய்யும் எண்ணம் கொண்டவர்கள்.
ஆகையால், கயவர்களும் தாங்கள் விரும்பியதை செய்யக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் விருப்பத்தின் விளைவு என்ன ஆகும், என்று சிந்திப்பதற்கான அறிவு, அவர்களிடம் இல்லை.
அதனால், மிருகத்தைப் போல கட்டுப்பாடில்லாத நெறி முறையற்ற வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள். இன்பம் ஒன்றையே பெரிதாக கருத கூடியவர்கள். பொறுப்பும், கவலையும் இல்லாதவர்கள். பொது வாழ்க்கைக்கு இடையூறு செய்பவர்கள்.
தேவர்களும் மேம்பட்டவர் என்று புகழ்வது போல், பழித்துக் கூறிய வஞ்சப் புகழ்ச்சி அணியின் சிறப்பு இதில் உள்ளது.
தேவர் என்பவர், மேன்மையானவர்.