Raga: இந்தோளம் | Tala: கண்ட ஆதி பல்லவி:நிலையான இடம் கண்டோம் நெஞ்சே - இனி
நேர்வரும் பகை யெல்லாம்
நெருப்பின் முன் பஞ்சே
அநுபல்லவி:குலையாத வலிவோடு காலமும் கண்டு
கூடித் தொழில் செய்யவே
குடியாட்சி இடம் கொண்டு
சரணம்:நீரினில் வலிவுள்ள முதலைபோல் படகு போல்
நிலத்தினில் வலிவுள்ள யானைபோல் தேர் போல்
சீரிடம் மாறாத செயல்திறமே பெருக
செல்லு மிடத்தில் மக்கள் சிறப்புறவே வருக
"எண்ணியார் எண்ணமிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்" என்னும் குறள் புரிந்து
திண்ணியராக நாட்டின் தேவைக்கே உழைப்போம்
தீமையெல்லாம் ஒழித்தே நன்மையில் தழைப்போம்