Raga: வாசஸ்பதி | Tala: ஆதி பல்லவி:இறை மாட்சி நலம் வாழ்கவே - மக்கள்
எல்லோரும் இன்புறவே
முறை செய்து காப்பாற்றும்
அநுபல்லவி:நிறை காட்சிக் கெளியவன் இன்சொலனாக
நேசர் இதம் கூறும்
நில வுலகம் வாழ்த்தும்
சரணம்:நாடும் குடிப்பரப்பும் நால்வகைப் படையும்
நல்லமைச்சும் செல்வமும் நட்பும் வல்லரணும்
கூடும் நிலையுடையான் அரசருள் ஏறாம்
கோதிலா வீரமும் மானமும் மேலாம்
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவை
வகுத்தலும் வல்லதே அரசெனச் சேர்த்தவை
பயிற்றிடும் கல்வியுடன் துணிவு தூங்காமை
பைந்தமிழ்க் குறளறம் பரவும் செங்கோன்மை